HDMI போர்ட்டுகளோடு கூட வரக்கூடிய இந்த மினி பிசி ஸ்டிக்குகள்தான் இப்போதைக்கு ஹாட் கேட்ஜட்களாம். பொடி கணி சுளிகள் எனலாமோ?கணப்பொழுதில் உங்கள் டிவியை கணிணியாக்கிவிடுகிறது. பென்டிரைவ் போல குட்டியாயிருக்கும் இந்த கணி சுள்ளியை உங்கள் டிவியின் HDMI போர்ட்டில் செருகிவிட்டால் போதும். உங்கள் டிவி கணிணியாக உருமாறிவிடுகிறது. அன்ட்ராய்ட் முதலான பல்வேறு OS-களோடு வருகின்றன. இதன் Wi-fi வழி கேம்ஸ்,அப்ஸ்,பிரவுஸ் என பலவும் பண்ணலாம்.வீட்டு போட்டோக்களை வீடியோக்களை பார்க்க மெமரி கார்ட் போட ஸ்லாட்டும் இருக்கிறது.பிசி ஸ்டிக்கிலுள்ள USB போர்ட்டில் ஒரு வயர்லஸ் மவுசை செருகிவிட்டால் ஆல்செட்.கவுச்சில் அமர்ந்து உலகை உலாவரலாம்.அம்பது டாலருக்கெல்லாம் கிடைக்கிறது.சும்மா ஒரு அறிமுகம்.
கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.
நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான்.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும்.
இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும்.
”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல.
கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு வருகின்றது.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog
ஆயிரம் தான் ஆனாலும் காகித நூலில் படிக்கும் சுகம் வருமானு சொல்லிக் கொண்டே கொட்டாவியை விடும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு செய்தி. உங்கள் அபிமான நூற்செல்வங்களையெல்லாம் இப்போது கிடைக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷமாகட்டும். சீக்கிரத்தில் பல நூல்களும் காகித வடிவில் கிடைக்காமல் போகும் அபாயம். உபயமும் உபாயமும் இந்த கணிணியுகம். மின்நூல்களை எளிதில் தயாரிக்க முடிவதாலும் கணப்பொழுதில் கணக்கின்றி விற்க முடிவதாலும் பதிப்பாளார்களும் மின்நூல்களையே தெரிவு செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வருடம் காகிதபுத்தகங்களைவிட மென்புத்தகங்கள் அதிகமாக விற்று சாதனை படைத்திருக்கிறது. சில என்சைக்ளபிடியாக்கள் கூட காகித பதிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளன. பல நன்மைகள் இருந்தாலும் தொல்லைகள் தான் நம் கண்ணில் தெரிகின்றது. கணிணிசார் பதிப்புகள் நிலைப்புதன்மையும் நம்பகத்தன்மையும் இல்லாததே முக்கிய காரணம். ஆன்லைனில் உண்மையும் பொய்யும் நிலவ அதின் நிஜத்தை கண்டுபிடிக்க வாசகன் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நூலக புத்தகங்களில் படிப்பவற்றை வேதவாக்காக எடுத்துகொள்கிறோம். இன்றைக்கிருக்கும் URLகள் மற்றும் மின்புத்தகங்கள் நாளை வாழ்வதில்லை. சமீபத்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் அடிச்சுவடுகளை கூட நாம் ஆன்லைனில் சீக்கிரத்தில் இழந்துவிட்டதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வள்ளுவர் கால வாழ்வை அவர் சுவடிகள் கல்லில் எழுதப்பட்ட எழுத்துபோல் நமக்காக பதிவு செய்துவைத்திருந்தன. இன்றைக்கும் பயன்பெறுகிறோம். போன வருடம் எகிப்தில் நடந்து முடிந்ததே மாபெரும் புரட்சி, அதை வரும் காலத்துக்கு எடுத்துச் சொல்ல எங்கே பதிவு செய்துவைத்திருக்கிறோம்?